Thursday, November 10, 2016

கவிஞன்



பலப்பணிகள் அலையென
அணிவகுக்கையிலும்
குறும்புகள் கொப்பளிக்க
கவிச்சோலையில்
சேட்டைகள் செய்து
குழந்தையாகிறான்!

காதல்கொண்ட கவிக்காதலி
மாற்றானுக்கு மனைவியாகையில்
மனவருத்தங்கொண்ட
காதலனாகிறான்!

கவிக்கருவைச் சுமந்து
படைப்பை பெற்றெடுத்து
கவிக்குழந்தையை குறைசொல்லுகையில்
கொதித்தெழுந்து
திருத்தங்களை திருத்தி
பாராட்டுக்களில் பரவசமடைந்து
தாயாகிறான்!

செய்யுளின் உறுப்புகளை உருவப்படுத்தி
கருத்துக்களைக் காட்சிப்படுத்தி
எதுகைமோனை வார்த்தைகளால்
சொற்களை செதுக்கி
சிற்பியாகிறான்!

பாரின் பாராட்டுபோதைக்கு அடிமையாகி
கர்வக்ரீடத்தை
சிரத்தில் சேர்க்கையில்
மர்மமாய் மரிக்கிறான்!

No comments:

Post a Comment