Thursday, November 10, 2016

பக்ரீத்



இறைவன் இஸ்மாயிலின்
இன்னுயிரில் இச்சைகொண்டாலும்
இப்ராஹிமிற்கும் இஸ்மாயிலுக்குமான இணக்கம்
அப்பாமகனின் இணையில்லா
இறைபக்தியை ஈன்றெடுக்க!

இன்னுயிர்மரிப்பதை இடைமறித்து
செம்மறியை சென்றடையச்செய்த
இறைவனின் இரக்கம்
இதயத்தை இதமாக்க!

முழுஇறைச்சியை மூன்றாய் பிரித்து
உற்றார் உறவினர்
ஏழை எளியவருடன் பகிர்கையில்
மட்டற்ற மகிழ்ச்சி மலர!

பிரியமான பிரியாணியை
பிரியமானவர்களுடன் பகிர்ந்துண்ணுகையில்
பேரின்பம் பெறுக!

வியர்வை விதைத்து
விளைந்த விளைச்சலை
வரியவர்க்கு வகுந்து வழங்க!

அல்லாவின் ஆணைக்கிணங்க
தாயும்சேயும் தனியேதவிக்க
தண்ணீர்தேடும் தாய்
ஏழுமுறை அலைபாய்ந்து அகிலத்திலும் அகத்திலும்
ஆனந்தஊற்றை ஏற்படுத்தி
பாசத்தை பகிர்ந்தநாளாம்
பக்ரீத்திருநாள்!

No comments:

Post a Comment