Thursday, November 10, 2016

அப்துல் கலாம்



தமிழ்வழிக் கல்வியும்  தாங்கள்
கற்றதனால் தலைநிமிர உங்கள்
அக்னிச்சிறகுகளால் உயரே பறந்தோம்!
உலகஅமைதி உரைத்த தமிழனை
தரணியறியச் செய்த உங்கள்
பொன்மொழிகளால் புதுஇரத்தம் பெற்றோம்!

உலோகங்கள்,
குறைஎடை செயற்கைகோள்களுக்கு மட்டுமல்ல
குறைஉடை செயற்கைகால்களுக்கும் என்றீர்கள்!
நீங்கள் இலகுஇதயம்
கொண்டதால்தான் - கலாம்ஸ்டெண்டும்
எங்கள் இதயத்தை
இலகுவாய் இதமாக்குகிறதோ!

விண்ணைவென்ற கைகளால்
வீணையையும் வருடினீர்கள்!
உங்கள் கீர்த்தியை உலகம்பாட
கீர்த்தனைகளில் களிப்புற்றீர்கள்!
வெற்றிக்களிப்பில் தேங்கினால்
மாசுபடுவோமென்றே தெளிந்தநீரோடையாய்
ஓடி தெளிவுரச்செய்தீர்கள்!

அயல்நாட்டினர் அழைத்தபோதிலும்
தாய்நாட்டிற்கே தலைமகனானீர்கள்!
இயற்பியலைப்போல்
இயற்கைஎழிலிலும்
இன்பம்கொண்டீர்கள்!
நீங்கள் விதைவிதைத்தால் விருட்சமாய்
வளர்ந்து விண்ணைவழிவிடச் சொல்வோம்!

No comments:

Post a Comment