Thursday, November 10, 2016

நாளிதழ்



அன்புச்சகோதரர்களுக்குள் அதிகாலையிலேயே
அன்புச்சண்டையை ஆரம்பிப்பாய்!
கட்டியவளை கழற்றிவிட்டு
கணவனோடு கைக்கோர்த்திருப்பாய்!
விண்ணுலகமும் மண்ணுலகமும்
சேர்த்து சுவடுகள் செய்வாய்!
வினாவிடையை வித்திட்டு
வெற்றிகளை வளர்த்திடுவாய்!

கேள்வியும் பதிலும் நானென்று
கேள்வியின் நாயகியாவாய்!
கவிஞர்கள்,கட்டுரையாளர்களின்
கருவறையாகின்றாய்!
நீண்ட நிகழ்ச்சிப்பட்டியல்களை
நாட்டத்துடன் நாடவைப்பாய்!
நிழல்நிஜ நாயகர்களின்
நிதர்சனம் நிச்சயிப்பாய்!


சிறுவர்களின் சிந்தனையை
சிறகடித்து சிறக்கச்செய்வாய்!
இளைஞர்களின் இமயஇலக்கை
இலகுவாக்குவாய்!
அடுப்படியில்அடைந்த அன்னையருக்கும்
அண்டத்தை அறிமுகமாக்குவாய்!
அலைபேசியில் அடைந்திருந்தாலும்
நாளிதழிலிலேயே மனம்நாட்டம் கொள்கிறதே!!

No comments:

Post a Comment