Thursday, November 10, 2016

சுயம்வரம் - ஆணின் பார்வையில்



பெண்வீட்டாருக்கு,
ஆறுஇலக்கத்தில் சம்பளம்வேண்டும்
அயல்நாட்டுவேலை வேண்டாம்!
அழகானவீடு வேண்டும்
அடுக்குமாடிவீடு வேண்டாம்!

ஆசைகளோ அகவைகளை தாண்டும்
அகவையோ முப்பதை தாண்டவேண்டாம்!
உயரமான மணமகன் வேண்டும்
சராசரி உயரம் தாண்ட வேண்டாம்!

குடும்பங்கள்சூழ திருமணம் வேண்டும்
கூட்டுக்குடும்பம் வேண்டாம்!
மணமகன் வீட்டைப்பிரிய வேண்டும்
மகள் பிரியவேண்டாம்!

வழிப்பறி செய்துவிட்டு
வரதட்சணை நான்கேட்கிறேன் என்றார்கள்!

பெண்ணே,
கனவுநாயகன்போல் கட்டுக்கோப்பாக  
இருக்கவேண்டினாய்!
நானோ கடமைகளுக்கும் கனவுகளுக்கும்
டுவே கட்டுண்டு கிடக்கிறேன்!

அடைந்த வெற்றிக்குள்
அடைந்துகொள்ள ஆசைகொண்டாய்!
நானோ என் வெற்றிக்கு வித்திட்டவளாய்
அகிலத்திற்கு அறிமுகம்செய்ய ஆவல்கொண்டேன்!!!

1 comment: