Thursday, November 10, 2016

கருணை



உலகுக்கே உணவளிக்கும்
உழவனுக்கும் ஊக்கமூட்டச்செய்வாய்!
வாயில்லா உயிரினங்களையும்
வாஞ்சையுடன் வருடுச்செய்வாய்!
வாழ்க்கைத்துணையுடனான
வருத்தங்களையும் திருத்தங்கள் செய்து
வாழ்வை வண்ணமயமாக்குவாய்!
மக்கள்செல்வங்களுக்கு செல்வங்களைவிட
மக்களேமேன்மையென முன்மொழியச்செய்வாய்!

அவசரவேளையிலும் அவசரஊர்திக்கு
வழிபாட்டுடன் வழியும்விடச்செய்வாய்!
நெரிசலில் இயலாதவருக்கும்
நெறியாளனாய் இருக்கைக்கொடுக்கச்செய்வாய்!
சமூகவலைதளங்களல்லாது
சமூகத்துடனும் சுமூகமாக 
நேரத்தைச் செலவிடச்செய்வாய்!
இயற்கைச்சீற்றங்களின் இன்னல்களையும்
ஈகைக்கரங்களால் களையச்செய்வாய்!

பணிவிடைபுரியும் பணியாளர்களிடமும்
பணிவன்புடன் பாசத்தைப்பொழியச்செய்வாய்!
பெற்றோரையும் பெற்றமொழியையும்
பெருமையோடு பறைசாற்றச்செய்வாய்!
பிள்ளைகளின் பிழைகளை
பொறுக்கும் பெற்றோராய் மாறச்செய்வாய்!
யாதும்ஊரே யாவரும்கேளிரென்ற
உண்மை உரைக்கச்செய்வாய்!

No comments:

Post a Comment