Thursday, November 10, 2016

வாயடைக்கப்பட்ட வானொலி நிலையம்



பாலைவனத்தில் தனிமரமாய் திரிந்தவருக்கும்
சோலைவனத்தில் சொந்தம் ஏற்பட்டது!
அமுதக்குரல்கள் கேட்க அதிகாலை
எழுவதும் ஆனந்தம் கொடுத்தது!
வனிதையின் விரல்நுனியில் வண்ணமட்டுமல்லாது
அண்டத்தின் அன்றாடங்களையும் அடைத்தது!
ஒளிந்திருந்த திறமைகளையும் கண்டுபிடித்து
ஒய்யாரத்திற்கு கொண்டு சென்றது!

வழக்கமான சலிப்பு வேலைகளும்
சிலிர்ப்புடன் சிறப்பாய் செய்யப்பட்டது!
நண்பனாய்நீ அருகிலிருக்கையில் சோர்வான
நெடும்பயணங்கள்கூட நீளவே நாட்டம்கொண்டது!
தன்னம்பிக்கை தகர்ந்த நேரங்களிலும்
பரிசுகளால் புத்துணர்ச்சி தரப்பட்டது!
உடல்சோர்வு அடைந்தாலும் துள்ளல்
பாடல்களால் உள்ளம் துள்ளிக்குதித்தது!

சூழப்பட்ட சோகங்களும் தொகுப்பாளரின்
நகைச்சுவை உணர்வால் தகர்க்கப்பட்டது!
காதல்போட்டிகளில் பரிசுகள் கொடுக்காவிட்டாலும்    
காதலர்களின்காதல் மலர வைத்தது!
நீண்டகால நெருங்கியநண்பனை நொடியில் 
இழந்ததுக்கத்தை  நெஞ்சில் ஏற்படுத்தியது!
பாடலுக்காக மட்டுமல்ல உன்வரவிற்காகவும்
காற்றலையில் காதுகொடுத்து காத்திருக்கிறேன்!!!

No comments:

Post a Comment