Thursday, November 10, 2016

கல்வி



வாழ்க்கைத்தேர்வில் மதிப்பெண்களைவிட
மனிதநேயமே மதிப்பைத்தந்திட!
மனப்பாடங்களைகாட்டிலும் மனம்கற்றபாடங்களே 
வழிகாட்டி வளத்தைவழங்கிடுமே!
கள்வர்களும் கல்விதந்தையானால்
கல்வித்தரம் கவிழ்ந்திட!
பணம்பிடுங்கும் கூடாரங்களோ
பள்ளிக்கூடங்களென்று பகல்கொள்ளையடிக்குமே!

குருவை குறைகூறாவிட்டால்
குற்றங்களும் குறைந்திடுமே!
இலட்சங்கள்தாண்டும் இலட்சியப்படிப்புகளும்
இலக்குகளிலிருந்து இடருகிறதே!
நன்றாய் படித்தவர்கள்
நாட்டின்மீது நாட்டம்விடுத்தாலும்
ஆர்வமாய்படித்தவரின் ஆற்றலில்
அனுதினமும் இயங்குகின்றோமே!

பெண்கல்வி பெற்றிடின்
தலைமுறைகளும் தலைநிமிர்ந்திடுமே!
கோட்பாட்டறிவின் கோட்டினைத்தாண்டி
நடைமுறைக்கல்வியையும் நாடிடலாமே!
உடற்கல்வியும் தொழிற்கல்வியும்
உயர்ந்ததென தெரிந்திடுவோமே!
கூடுதல்இணை கல்விசார்நடவடிக்கைகளிலும்
கூடுதல்இன்பம் பெற்றிடுவோமே!
பிள்ளைகள்மீது பொதியாய்ஏற்றிடாமல்
புதிதாய் சிந்திக்கச்செய்திடலாமே!
பகிர்ந்தஅறிவும் பட்டொளிவீசி
பாரினில் பிரகாசம்பரவிடுமே!

No comments:

Post a Comment