Thursday, November 10, 2016

ஸ்ரீ இராமானுஜர்



ஆயிரமாண்டுகளுக்கு முன்பே
புரட்சிநாயகனாய் புதுமைபுரிந்ததும்,
ஆலமரவிழுதாய் அன்பைவிதைத்தும்
அதிசயம்!
தீண்டாமைஒழிப்புக்கு
தீண்டியவளே தடையானாலும்,
தீண்டதகாதவனென்று அழைக்கப்பட்டவனின்
தீட்டையும் தீண்டிஅணைப்பு!

தாழ்ந்தகுலத்தோரென்று
தரம்தாழ்த்திடினும்,
திருக்குலத்தோரென்று தரம்உயர்வு!
காந்தியின் ஹரிஜனென்ற இன்றைய
வார்த்தைக்கும் அன்றேவழிகாட்டி!

குருவேகூறினாலும்
குருட்டுத்தனமாய் ஏற்கவுமில்லை!
சாதியின்சதி குருவின்முன் குறுக்கேநிற்கவில்லை!
குருவின்லட்சியங்களே நிறைவான
வாழ்க்கைவழங்க,
மக்களுக்கு சொர்க்கவழிகாட்டி
குருவுக்கே எம்பெருமானானார்!

நதிநீர் மேலாண்மைக்கும்
நீரே வழிகாட்டினீரே!
விவாதங்களை வாதங்களால்வென்று
சீண்டியவர்களையும் சீடர்களாக்கி,
ஆளுமைத்திறனால் கோவிலினறைகள்
தமிழ்மறைகளுக்கும் கதவைதிறந்தன!

No comments:

Post a Comment