Thursday, November 10, 2016

நகைச்சுவை



பெண்ணினத்திற்குப் பொன்நகை இல்லையென்றாலும்
புன்னகை பூக்கள்கொண்டு அலங்கரித்திடுவாய்!
தன்னைதாழ்த்தி நகைச்சுவைபுரியும் கலைஞனையும் 
மற்றவர்மனதில் மகிழ்ச்சிக்கொடி ஏற்றச்செய்திடுவாய்!
சமூகஅவலங்களையும் சுமூகமாக சமுதாயத்திற்கு
சுட்டிக்காட்டி சீர்திருத்தம் செய்திடுவாய்!

வயிறுவலிக்க வாய்விட்டுச் சிரிக்கவைத்து
ஊக்கிகள்கொண்டு நோய்களை துரத்திடுவாய்!
இருக்கமான மனதையும் இலகுவாக்கி
ஆனந்தக்கண்ணீரை ஊற்றெடுக்க வைத்திடுவாய்!
இடுக்கண்வருகால் நகுகயென இன்னல்கள்நிறைந்தாலே
நகைச்சுவை உணர்வைத்ததும்பச் செய்வாய்!

சண்டைச் சச்சரவுகளையும்
சாமர்த்தியமாய் சமாளித்திடுவாய்!
சுற்றத்தாரின் நெஞ்சத்திலிடம் பிடித்திடவே 
 குறுக்குவழி ஏணிகள் அமைத்திடுவாய்!
நகைச்சுவைகாட்சிகளின் ஓயாதநினைவலையில்  
 நீந்திநித்தம் தடைகளை கடந்திடச் செய்வாய்!

பற்கள்காட்டிச் சிரிக்கா  விட்டாலும்
சிரிப்பை சிறைபிடிக்க இயலாதே!
நவரசங்களில் பழரசமாய் இனித்திடும்
நகைச்சுவை தனிச்சுவைதானே!

No comments:

Post a Comment