Monday, February 18, 2019

கொரங்கி - மு.வெங்கடேஷ்

படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில இந்த சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரு கதை கேட்டவுடனேயே கண்ணுல இருந்து தண்ணீர் தார தாரயாய் கொட்ட ஆரம்பிச்சிருந்தது.மொத்தம் 12 கதையில அக்கா தம்பி உறவப் பத்தி தான் 5 கதை (கொரங்கி, கூலிக்காரன்,சீருடை, டவுண்காரர், காக்கா குஞ்சு).ஆனா வேற வேற சூழல்ல.வேற வேற வயசுல ஏற்படுற ப்ரியங்கள். அவ்வளவு நாள் அடிச்சுக்கிட்டு கிடந்த அக்கா தம்பிய, அக்கா ருதுவானவுடனே பிரிச்சுவிடுறது...அக்கான்னு கூப்புடுன்னு சொல்றது எல்லாமே எல்லா குடும்பத்திலயும் நடக்குற திகில் மாற்றந்தான்..அக்கா, தம்பின்னா கூடப்பிறந்தவங்களாத்தான் இருக்கனும்னு எந்தக்கட்டாயமும் இல்லையே. மனசார அக்கா, தம்பின்னு கூப்பிட்ட எல்லாருமே கண்ணு முன்னாடி வந்து போறாங்க..(கூலிக்காரன்)


எனக்கும் ஒரு தம்பி இருக்கிறதுனால கதைகளோட நல்லாவே ஒட்ட முடிஞ்சது. எனக்கு அப்புறம் ஒரு தம்பி பிறந்து கொஞ்ச நேரத்திலேயே இறந்ததுனால அடுத்து பிறந்த தம்பிமேல நிறைய அக்கறையும் பாசமும் உண்டு . எட்டுவருஷம் வித்தியாசங்கிறதுனால அப்பா எப்பவுமே அவன் தான் உன்னோட முதல் பிள்ளைன்னு சொல்வாங்க..தம்பி நல்லபடியா பிறக்கனும்னு கோவில்ல தலையெல்லாம் முட்டி சாமி கும்பிட்டு இருக்கேன்..உன் தம்பி வந்துட்டா, உங்க அம்மா உன்ன கவனிக்க மாட்டாங்க..உன் தம்பிக்கு உன் பொருள் எல்லாம் குடுப்பியான்னு நிறைய பேர் சிண்டு முடிஞ்சுருக்காங்க..உன் தம்பிக்கு எல்லாக் கெட்டப்பழக்கமும் சொல்லிக்கொடுப்பேன்னு  முத்து சித்தப்பா பயங்காட்டுனப்ப தம்பி நல்ல பையனா வளரனுமேன்னு அழுகையே வந்துட்டு..

திருச்செந்தூருக்கு அப்பா நடயா நடந்தாங்க..அய்யா வைகுண்டர் பிறந்தநாள்லயே பிறந்தது நாள அப்பாக்கு ரொம்பத்தான் பெருமை.. . அம்மா திருச்செந்தூர் முருகன் கோவிலையே அங்கப்பிரதட்சணம் செஞ்சாங்க...தவம் இருந்து பெத்ததுனால அவனத்தான உங்களுக்கு பிடிக்கும்..சரியா பத்தாவது மாசத்தில பிறந்த நான் இளக்காரமா போயிட்டனான்னு நிறைய நேரம் கடுப்பா வரும்..ரிமோட்டுக்கு சண்டை போட்டா அம்மா வந்து சீப்பு, ஈக்கு குச்சிய உருவி என்னையதான் அடி வெளுப்பாங்க..  அவன் காலேஜ் ஹாஸ்டல் போனப்ப, இப்போ ஒரு ஆறு மாசம் எங்க வீட்டுல இருந்துட்டு வேலைக்காக தனியா போனப்ப எல்லாம் ஏங்கி ஏங்கி கண்ணீர் வந்துச்சு..

என்னய கல்யாணம் கட்டிக்கிட்டவரே எங்க அக்கா என்னய இப்படி கவனிக்க மாட்டிக்காளேன்னு பெருமூச்சு விடுவாரு...தம்பிய மட்டும் எப்படி கவனிக்கா பாருன்னு சொல்றப்ப அவர் முகத்தில அவ்வளவு கடுப்பு தெரியும்.... புத்தகத்தோட வாசிப்பு அனுபவத்தை எழுதலாம்னு பாத்தா ...என் கதை ஞாபகம் வந்திருச்சு...பரவாயில்லை ..மார்ச் 3 அவனோட பிறந்த நாள் பதிவா போட்டுக்குறேன்."அவ ஏன் கோவிலுக்கு வரல...".."ஏல பேசாம கெட..அவள இன்னைக்கு பன்னி முட்டிட்டாம்...அதனால வரமாட்டா"  இந்த பதிலுக்கு ரொம்பவே சிரிச்சேன்."கழுதவிட்டைல முன் விட்டை வேற பின் விட்டை வேறயா...எல்லாம் ஒன்னுதான்" ..அம்மா இப்படி அடிக்கடி சொல்லுவாங்க..


எங்க அம்மாவோட தாலிய கொஞ்சம் தங்கம் சேர்த்து செய்ய சொன்னப்ப ஆசாரி ஒருத்தர் அவர் குடும்பப் பிரச்சனையில பாதி தங்கத்தை எடுத்துட்டு மீதி தங்கத்தைதான் கொடுத்தார். அதை திருப்பி வாங்குறதுக்குறள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு.
'பட்டறை ' சிறுகதைல வர்ற ஆசாரி கதைய படிச்சஉடனே இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு. 'தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது'. நான் தினமும் ஃபோன் பண்ணாட்டியும், தினமும் ஃபோன் பன்ற அப்பாவோட தவிப்பு இனிமேயாவது எனக்கு புரியும்னு நினைக்கிறேன். 'முறுக்கு' சிறுகதை படிச்சப்போ மாமாவோட தியேட்டர்ல படம் பார்க்கும் போது முருக்கீ முருக்கீன்னு தட்டநீட்டிட்டு வரும் அண்ணன் ஞாபகம் வந்தார். இப்போ மாமாவோட தியேட்டரும் இல்ல.. இனிமேல் எந்த தியேட்டர்ல அப்படி முருக்குத்தட்டு தூக்கிட்டு வருவாங்கன்னு தோனுச்சு.கூலிக்காரன் கதையில வர்ற சரசக்கா எங்க பக்கத்து வீட்டு வசந்தா அக்காவ ஞாபகப்படுத்திடுச்சு...இப்போ எங்க இருக்காங்களோ..

ஆக மொத்தத்தில இந்த கொரங்கியே நான் தான்னு உணர வெச்சுட்டீங்க..

ஜீவா படைப்பகம் - விலை 140 ரூபாய்

3 comments: