Thursday, October 19, 2017

அடுப்பங்கரைப் புல்லாங்குழல் - முனைவர் மரியதெரசா

பெண்களின் பெரும்பாலான நேரங்கள் சமையலறையில் என்ன உணவுவகைகள் செய்யலாம் என்று யோசிப்பது,  அதற்கான ஆயத்தங்கள் செய்வது, சமையல் செய்வது, அதற்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கெட்டுவிடாமல் பாதுகாப்பது , சமையலறையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலேயே கரைந்துவிடுகிறது என்பது பரவலான கருத்து.

சமையலறை, காய்கறி , மளிகைச் சாமான்களுடனேயே அதிக நேரம் செலவிடும் கவிதை எழுதும் தாகம் கொண்ட பெண்ணின் கண்ணோட்டத்தில்  இந்த புத்தகம் கவிதைகளால்  நிறைந்துள்ளது.
தான் சொல்ல வரும் கருத்துக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், காய்கறி , மளிகைச் சாமான்களுடன் ஒப்பிட்டு உருவகித்துக் கூறியிருப்பதால் கூறப்படும் கருத்துக்கள் எளிதாய் ஜீரணமாகி விடுகின்றன.

குறிப்பிட்ட சில மூலப்பொருள்களைக் கொண்டு இத்தனை  வகையான உணவு வகைகளைத் தான் செய்ய முடியும் என்று ஒரு வரையறை இருக்கலாம். ஆனால்
குறிப்பிட்ட சில கருப்பொருளைக் கொண்டு இத்தனை வகையான  கவிதைகள் மட்டும் தான் படைக்க முடியும் என்று எந்த வரையறையும் இல்லை என்று நிரூபித்துவிட்டார் முனைவர் மரியதெரசா.



ஒரு காய்கறியோ, மளிகைப்பெருளோ எதை மையப்பொருளாய் எடுத்துக் கொண்டாலும் அதன் தனித்துவம், தோற்றம் ஆகியவற்றை கற்பனை கலந்து சொல்வதுடன், அதற்கு பொருத்தமான வாழ்க்கைக்  குறிப்புகளையும் அங்கங்கே சொல்லியிருப்பது,....தினமும் நாம் பார்த்து உண்ணும் உணவைக் கண்டு, நமக்கு இத்தனை நாளாய் தோன்றவில்லையே என்ற எண்ணத்தையும், இயற்கையின் படைப்பில் இத்தனை உள்ளீட்டு அர்த்தங்கள் இருக்கின்றதா என்றும் வியக்கத் தோன்றுகிறது.

பச்சை குடுமிக்காரி
வெள்ளைப் புடவைகாரி
முள்ளங்கி
வெள்ளை சேலை உடுத்தியவளுக்கு 
பசுமை மறுக்கப்படும் - இது
வாழ்க்கையின் கோணங்கி!

வட்டவட்டமான பருப்பு
வனிதையின் பொட்டுப் போன்ற அமைப்பு
மங்கள நிறம் கொண்ட சிறப்பு
மங்கையருக்கு உதவும் மணிவிளக்கு
தங்கத்தில் செய்தார் போல் அழகு
தண்ணீரில் வேகும் மஞ்சள் நிலவு
தன்னை கரைத்து உருவாக்கும் குழம்பு
தண்ணீகரில்லா சுவை நல்கும் மெருகு
எல்லோர் சமையலறையோடும் உறவு
நல்லோர் நலிந்தோர்க்கும் விருந்து
செல்லக் குழந்தை அது அடுப்பங்கரைக்கு 
செல்வக் களஞ்சியமாய் என்று  பராமரிப்பு


இந்தக் சிறு கவிதைப் பலகாரங்கள் இடைத்தீணி தான்.
அடுப்பங்கரையில் அடைத்து ஊதுகுழலால் அடுப்பை  ஊதச்சொன்னாலும் அதைப்புல்லாங்குழலாய் மாற்றும் பக்குவம் பெண்களிடம் உள்ளது என்று தன் கவிதைகள் வழி காட்டியிருக்கும் முனைவர் மரியதெரசாவிற்கு வாழ்த்துக்கள். 

4 comments:

  1. இது மிகவும் சிறப்பாக இருக்கிறது. முனைவர் மரியதெரசா அவர்களை தொடர்புக்கொள்ள இயலுமா? அவர்களுக்கு இன்ஸ்டா பக்கம் ஏதேனும் உள்ளதா?

    ReplyDelete
  2. என்னுடைய comment தான் அது. reefa2012@gmail.com பதில் இந்த mail id'இல் தெரிவிக்கவும். நன்றி.

    ReplyDelete