Thursday, December 8, 2016

கணவருக்குத் திருமணநாள் வாழ்த்துக்கவிதை



மகள்பெற்றவளிடம் கொண்ட காதல்
பெற்றமகள் கண்டு களவாடல்
காதலனாய் சேட்டைகளில் பித்தன்
கணவனாய் காதலில் புத்தன்
அந்தமானில் காதலன் அழகு
அவனிடம் காதல்கற்கப் பழகு

கல்லானாலும் கணவனென கொண்டேனே
கற்களால் கனவுப்பாதை காட்டுவதால்
புல்லானாலும் புருஷனென புரிந்தேனே
வளைந்து வருடி வாசம்சேர்ப்பதால்
தூக்கலாய் வரும் தூக்கத்தில்
சொப்பன சுந்தரி நானோ

வெளிநாட்டு வாழ்க்கைப் பிரவேசம்
துணைவியின் திறமைக்கு வெளிச்சம்
இரவும்பகலும் இயற்கையின் நியதியோ
கூடலும்ஊடலும் இல்வாழ்கையின் இலக்கணமோ
பாசமெனும் புதைந்த புதையல்
திறந்திடும் சாவியோ என்காதல்

இல்லாளை ஈர்க்கப் பொய்காந்தனல்ல
மனைவியின் மனம்பறிக்கும் நடிகனல்ல
நளபாகனாய் நீ விரும்ப
நளதமயந்தியாய் நான் விரும்ப
மூன்றுவருடம் மூச்சுவிடுமுன் முடிந்ததே
அமிர்தத்துடன் ஆனந்தம் பெறுகியதே!!!!!

5 comments: