Thursday, December 8, 2016

மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



தொலைக்காட்சியில் தொலைந்தவளை
நெடுந்தொடரின் நெடியிலிருந்து
அன்னையின் அடையாளத்தை
தமிழன்னையால் மீட்டவளே!
என்சோம்பலை முறிக்கும்
துறுதுறு தோழியே!


உபத்திரவங்கள் பல செய்தாலும்
உதவிகள் சில செய்ய உத்வேகம்கொண்டவளே!

கோபக்கனல் உச்சம்தொட்டாலும்
முத்தமழையால் உச்சிமுகரச்செய்பவளே!

ஆடல்பாடல் தாகத்தை – உன்
தமிழ்பாடல்களால் தீர்த்தவளே!
கணவனின் காதலையும்
பெற்றோரின் பாசத்தை
பறித்துக் கொண்டவளே!


உன் பொம்மைக்கும், அன்னைக்கும்
அம்மையப்பன் ஆனவளே!
அன்னையிடம் அமுதுண்ணும் ஆசையை

அறிந்து அமிர்தமாய் அமுதூட்டியவளே!

நியூட்டனின் மூன்றாம் விதியாய்
நற்பண்புகளுடன் நான்நடக்க

நன்றாய் நினைவூட்டியவளே!
அத்திப்பழத்தில் தோன்றிமறையும்
கொசுக்களைப் போலல்லாமல்
வண்ணத்துப்பூச்சியாய் வலம்வந்து
வாகைசூட வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment