Thursday, December 8, 2016

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கண்விழித்து நாட்டைகாத்தவருக்கும்
அகக்கண்விழிக்கவைக்கும் ஆசிரியருக்கும்
பாசப்புதல்வனாய்ப் பிறந்தவனே!
தம்பிக்குமட்டுமல்ல தரணியிலனைவருக்கும்
சகோதரியானவளை தமக்கையாய் கொண்டவனே!
பண்புமிகுந்த பேராசியரையும்
தமயனாய் தவமாய்பெற்றவனே!

உதகையிலிருந்து உதித்து வந்து
முருகனின்பெயர்போலவே மனங்களை கவர்ந்தவனே!
முதல்மதிப்பெண்களுடன்
மதிப்பான எண்ணங்களையும் பெற்றவனே!
நெஞ்சினிலேயென்ற பாடலுடன்
பலநெஞ்சங்களிலும் இடம்பிடித்தவனே!
பால்வடியும்முகத்தினில் கள்ளம்கபடமில்லா
குழந்தைச்சிரிப்பைக் கொண்டவனே!

வாழ்க்கையில் வகைவகையாய்
இலட்சியங்கள் இலட்சம் தொட்டாலும்
இலட்சியவானில் இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சுதந்திரபறவையானவனே!
தோழியின் உணர்வுக்கும் ஊக்குத்துடன்
உற்சாகமும் ஊட்டியவனே!
வெண்மதியாய் வாழ்க்கைத்துணை
வானில் ஒளிவீச இரவாகவும்
இறங்க இதயம்கொண்டவனே!
சந்தோஷச் சாரல் வாழ்வில்
செழுமையை சேர்க்க பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பனே!

No comments:

Post a Comment