Thursday, December 1, 2016

உதவி



சுட்டெரிக்கும் சூழலில் அயலார் உழன்றிடினும்
பாறைப்பனி மனமுருகி உதவிஊற்றாய் தாகம்தனிக்குமே!
பகலவனாய் பலனேதும் பாராமல் பாசக்கதிரை
பாரில் பரவச்செய்ய உலகமே உயிர்பெற்றிடுமே!
ஆதவன் ஆதாயாமின்றி ஆற்றலை அள்ளித்தர
வழங்கப்பெற்றவர் வரியவருக்கு வாரிக் கொடுத்திடுவரே!

பூமித்தாய் பூதவுடல் போதுமென போதிக்க
மாற்றுத் திறனாளிக்கும் மாற்றம் மலர்ந்திடுமே!
காய்ச்சமரமாய் கல்லடிபடினும் கனியை  கள்வருக்கும்
வழங்குகையில் வானும் நெகிழ்ந்து பன்னீர்தெளித்திடுமே!
பணம் பெற்றவரும் குணம் பெறுகையிலே
செய்திடுவார் உதவி பெற்றிடுவார் பதவி!

அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமோ
கொடுக்க கொடுக்க குறையாது நிறைகுடமோ
ஆச்சர்யம் அள்ளித்தந்திடுமே அறிவுப் பகிர்வு!
சீற்றந்தரும் இயற்கையும் ஏற்றந்தரும் உதவிகள்கண்டு
ஏமாற்றம் கொண்டு விட்டுவிலகி ஓடிடுமே!
விதைத்தவன் மறந்தாலும் விருட்சமாய் வளர்ந்து
காயும்கனியாய் வளர்த்தவன் வசம் சேர்ந்திடுமே!

No comments:

Post a Comment