Friday, May 19, 2017

தாயும் சேயும்


வயிற்றில் இடைவிடாது
எட்டி உதைத்து விளையாடும்
கால்பந்தாட்டம்
வெற்றி வாகை என்றும்
நீயே சூடிட கொண்டிடுவாள்
மனவோட்டம்

இருபது எலும்புகள்
ஒரே சமயத்தில்
ஒன்றாய் உடையும் 
வலி மறக்கும்
உன் அழுகைக் கண்டு
சுரந்திடுவாள் 
அமுதமும்
ஆனந்தக்கண்ணீரும்

காம்பைக் கடித்துப்
பாலைக் குடித்தாலும்
குருதி கசிந்தாலும்
உதிரத்தை உணவாய்
ஊட்டிடுவாள்
தன்மையாய் தலையை 
வருடிடுவாள்.

எச்சில் வழிந்து
மென்று துப்பிய உணவும்
ருசித்திடுவாள்
அஃது அமிர்தத்திற்கு 
ஈடுஇணையில்லை எனவும்
பேருரை ஆற்றிடுவாள் 

அறுந்தவாலாய்
ஆட்டம்போட்டாலும்
ஆயகலைகள் கற்ற 
பிள்ளையென்று 
பார்ப்போரிடம் செய்திடுவாள்
பிரசங்கம்
தனியே அமைத்துத் 
தந்திடுவாள் அரசாங்கம்

வலியவளிடம்
வற்றாது வழிந்தோடும்
எல்லையில்லா இன்பத்தின்
ஆதியும் நீதான்
அந்தமும் நீதான்!

2 comments:

  1. உணர்வைப் பிழிந்து
    எழுதிய பா இது!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்ந நன்றிகள்

      Delete