Sunday, December 31, 2017

இராணுவ மருத்துவப் படை அமைப்புதினம் - army medical corps establishment day

Voice clip: அகில இந்திய வானொலி சென்னை ஒன்று அலைவரிசை 720khz
https://drive.google.com/file/d/14t53Yc0NzWTV3b6JgZM3sJLwT-msK1_X/view?usp=drivesdk

இராணுவத்தில் பணிபுரியும் அனைவரும் சிறந்த முறையில் மருத்துவ வசதி பெறுவதற்காக  அமைக்கப்பட்டதே இராணுவ மருத்துவப் படை அமைப்பு. இப்படையில் உள்ளவர்கள் மருத்துவத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளாக இருப்பார்கள். 1764 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் சமீபத்தில் தான் 250 வது ஆண்டு விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடியது.


சர்வே சண்டு நிராமயா (Sarve Santu Niramaya) என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். எல்லோரும்  நோய், குறைபாடுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், பயணிகளுக்கான மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களால் இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பறந்து விரிந்து தன் சேவையை ஆற்றி வருகிறது.

ஜனவரி 1 ,1764 ஆம் ஆண்டு வங்காள மருத்துவ உதவிக்குழு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழு  முன்னால் படைத்துறை வீரர்களுக்கும் அவர்களைச் சார்ந்த குடும்பத்திற்கும் மருத்துவ உதவி செய்து வருகிறது.இராணுவத் துறை மக்கள் மட்டுமல்லாமல் இயற்கைப் பேரழிவைச் சந்தித்த மக்களும் இவர்களது உதவியைப் பெற்று வருகின்றனர்.


ஏப்ரல் 3,1943 ஆம் ஆண்டு IMS என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ சேவை,IMD என்றழைக்கப்படும்  இந்திய மருத்துவத்துறை, IHC என்ற அழைக்கப்படும் இந்திய மருத்துவமனைப் படை ஆகிய அனைத்தும் இணைந்தே இந்திய இராணுவ மருத்துவப் படை அமைப்பாக உருவாகியது . சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய இராணுவ மருத்துவப் படை அமைப்பு  என்ற பெயர் இராணுவ மருத்துவப் படை அமைப்பு  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 3, 1966 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன் அவர்கள் இந்த அமைப்பிற்கான ஜனாதிபதித்தரநிலைகளை அதன் துவக்க நாளன்று அறிமுகப்படுத்தி வழங்கினார். போர் மற்றும் அமைதியான நேரங்களில் இந்திய ஆயுதப்படைகளுக்கு உதவிய புகழ்பெற்ற வரலாறு இராணுவ மருத்துவப் படை அமைப்பையேச் சேரும். தொழில் சார்ந்த ஈடுபாட்டுக்கும், அர்ப்பணிப்பிக்கும் பெயர் பெற்றவர்கள் நம் இராணுவ மருத்துவப் படை அமைப்பினர்.

ஜம்மு காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு 'சத்பாவனா இயக்கம் '  மூலமாக பல மருத்துவத் தொண்டுகள் ஆற்றி வருகின்றார்கள். ஆபத்தான நிலப்பரப்புகளில் கூட இராணுவ மக்களுக்கு மகத்தான சேவையை அளித்து வருகின்றனர்.இராணுவ மருத்துவப் படை அமைப்பினருக்கான கொடியில் அடர் சிவப்பு, கருப்பு, மஞ்சள் என்று மூன்று வண்ணங்கள் இருக்கின்றன. மூன்று அமைப்புகள் சேர்ந்து இந்த இயக்கம் உருவானது என்பதையே இந்த மூன்று வண்ணங்கள் குறிப்பிடுகிறது.


அடர் சிவப்பு நிறம் அரசு இராணுவ மருத்துவப் படை மற்றும் உலகில் உள்ள பல மருத்துவ சேவை அமைப்புகளைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. அனைவரும் நோயிலிருந்து விடுதலை , நல்ல ஆரோக்யத்தை பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.இந்திய மருத்துவமனைப் படையைக் குறிப்பிடும் கருப்பு வண்ணம் பிறப்பு , இறப்பை குறிப்பிடுவதாக அமைகிறது.1943 ஆம் ஆண்டிற்கு முன் சேவை வழங்கிய இந்திய மருத்துவ சேவை அமைப்பினரை நினைவு கூறும் விதமாக தங்க மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. சூரியக் கடவுளை மருத்துவக் கடவுளாகவும் இந்த வண்ணம் குறிப்பிடுப்படுகிறது. 

No comments:

Post a Comment