Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினம் - நவம்பர் 14... அகில இந்திய வானொலியில்


https://drive.google.com/file/d/1rjgGEc-uIvtJKwv_WZ1h8UkHBEhfdmHI/view?usp=drivesdk

காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜவர்ஹலால் நேரு குழந்தைகளின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டதனாலேயே ,நம் நாட்டில் எல்லா குழந்தைகளும் அடிப்படைத் தேவைகளையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக, அவரது பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.





இப்பொழுது குழந்தைகள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்றஎல்லா துறைகளிலும்  தங்கள் திறமைகளை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். சிறுவயதிலேயே மேடைபயங்களையெல்லாம் காலடியில் மிதித்து வானொலி,தொலைக்காட்சி, பத்திரிக்கைத்துறை, இணைய ஊடகங்கள் என்று வெற்றிக் கொடி பறக்கவிடும் ஆயிரக்கணக்கான  குழந்தைகளை நாம் அறிவோம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை விட அவர்களது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமை வெளிப்படுவதில் அதீத ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பெற்றோர்கள் ஈடுபாடு கொண்டிருப்பது ஒருவகையில் குழந்தைகளுக்கு  வழிகாட்டுதலாகவும் , ஊக்கம் தருவதாக இருந்தாலும் மற்றொரு வகையில் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றது  என்பது நமக்கு கவலை தரும் செய்தி.  

பொரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் குழந்தைகளின் மேல்  ஆர்வக்கோளாறாய் திணித்துவிடுகின்றனர். அது அவர்களது குழந்தை பருவத்தின் மகிழ்ச்சியையும் பறித்துவிடுகின்றது. 


பாலியல் குற்றங்கள் அதிகமாவதைத் தடுக்க குழந்தைகளுக்கான இந்த நல்ல நாளிலேயே ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய புரிதல்களையும்,  விழிப்புணர்வையும் நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நம்கடமையாகும்.

கதை சொல்லக் கேட்டு நச்சரித்தக் குழந்தைகள் இப்பொழுது மின்னனு எந்திரங்கள் போதுமென்று திருப்திப்பட்டுக் கொள்வதற்குப் பெற்றோர்களே காரணமாக இருப்பது வேதனையான விஷயம்.நல்ல பழக்க வழக்கங்களையும், சகமனிதர்களை அன்போடு அரவணைக்கும் பாங்கையும் நாம் தானே நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் 

குழந்தைகளைத் தொழிலாளர்களாய்ப் பணியில் அமர்த்துவது சட்டத்திற்கு எதிரான செயல் என்றாலும் வறுமை அந்த பிஞ்சுக் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடச்செய்வதோடு  , சமூக விரோதிகளுடன் சேர வைத்து சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடவைத்துவிடுகிறது.

ஒரு பக்கம் குழந்தைகள் உணவில்லாமல் வறுமையில் வாடுகின்றார்கள் என்றால் மறுபக்கம் சமநிலையற்ற நச்சுத்தன்மை நிறைந்த உணவு போன்றவற்றால்  அதிக எடை கொண்டு குழந்தைகள் பல வகையான நோய்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

உணவு,உடை,இருக்க இடம் இல்லாமல் துன்பப்படும் எத்தனையோ குழந்தைகளை நாம் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பார்க்க நேர்கிறது. இன்று ஒருநாள் மட்டும் குழந்தைகளிடையே போட்டிகள் நடத்தியோ, தலைவர்களைப் போல் வேடம் அணிவித்தோ இந்தநாளைச் சிறப்பாய் கொண்டாடிவிட்டோம் என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.


எல்லா குழந்தைகளும் அடிப்படைக் கல்வியாவது பெற்றிட நம்மாளான உதவிகளைச்  செய்வோம் என்று உறுதி ஏற்போம். அவர்கள் வருங்கால இந்தியாவை வேர்களாகத் தாங்கி உலகநாடுகள் மத்தியில் ஒளிரச் செய்துவிடுவார்கள் என்று நம் குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்போம்.

No comments:

Post a Comment