Tuesday, June 20, 2017

அப்பா

மனைவியைப் பிரிந்து
மனைக்காக்கப் பறந்து சென்றாய்
தேடித் திரிந்து
கொண்டு வந்த பொருள்
அனைத்தும் 
பெற்ற குஞ்சுகளுக்கே
பகிர்ந்தளித்தாய்

தனிமை உனக்கு
ஏற்றம் தந்தாலும்
ஏகாந்தம் தந்த
ஏக்கத்தை 
நான் அறிவேன்!

இல்லாளின் இன்முகம் மறந்து 
இல்லற இன்பம் இழந்து 
இணையில்லா வலியை
மனதில் பொதித்து
வைத்தாய்

கடல் கடந்து சென்றாய்
அந்நிய நாட்டில் 
அன்னத்தையும்
சிக்கனமாய் செலவழித்து
என்னை
சொந்த நாட்டில் 
சொர்க்க வாழ்க்கை
வாழச்செய்தாய்!

உழைத்தாய்
உழைக்கின்றாய்
உழைப்பாய்
ஆசிர்வதிக்கப்பட்டவன் நானப்பா

தந்தை மகற்காற்றும் 
உதவியை செய்துவிட்டாய்
போதும்....கைமாறு செய்யவிடு
மகன் தந்தைக்காற்றும்
உதவிக்கு இப்பிறவி போதாதே 
அடுத்த பிறவியில் 
வாய்ப்புக்கொடு
அப்பனாக நானிருக்கேன்
நன்றிக்கடன் கொஞ்சம் 
தீர்த்துக் கொள்கிறேன்......

1 comment: